search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு லட்சம்"

    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ஒரு லட்சம் ருபாய் வழங்கினார். GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.30 கோடி ருபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவம்  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    ×